"ஆபாச யூடியூபர்" மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 3493

ஆபாச யூடியூபர் மதன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசியதோடு, லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 18ஆம் தேதி சேலத்தைச் சேர்ந்த மதன் கைது செய்யப்பட்டார்.

மதனின் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணையின்போது, மதன் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அதனை முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments